தூத்துக்குடி, ஏப்ரல் 10
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் (NMEK) கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்களுக்குத் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், இம்முறை NMEK கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறங்குகிறார். படித்த இளைஞர்கள் மற்றும் சமூகப் போராளிகளை முன்னிறுத்தித் தேர்தல் சந்திக்கும் இக்கட்சிக்கு, ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுச் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி, அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்களுக்கு ‘மைக்’ (Mike) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) இவரது பெயர் மற்றும் சின்னம் வரிசை எண்: 3-ல் இடம்பெற்றுள்ளது.சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருணாதேவி ரமேஷ்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் ஒட்டப்பிடாரம் தொகுதியின் கிராமப்புறங்களில் ‘மைக்’ சின்னத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
“மக்களின் குறைகளை உரக்கச் சொல்லவும், தொகுதியின் மாற்றத்திற்காகவும் இந்த மைக் சின்னம் ஒலிக்கும்” என அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது உற்சாகமாகத் தெரிவித்து வருகின்றனர்.
