• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பொியசாமி

policeseithitv by policeseithitv
September 29, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பொியசாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழக முதலமைச்சர்ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனை பேரில், கனிமொழி எம்.பி மேற்பார்வையில் மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் எந்த ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலை தொடா்ந்து அதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி செய்து வருகிறார்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் புதியதாக கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகள் இல்லாத வகையில் 360 கிலோ மீட்டா் தூரம் உள்ள அனைத்து கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து அதிகாலையில் மேயர் ஜெகன் பொியசாமி இருசக்கர வாகனத்தில் சிறு குறு சந்துகள் வரை சென்று முதலில் விளையாட்டு மைதானம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாய்களை பார்வையிட்டார். அதில் நிறைய அடைப்புகள் உள்ளதை கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இப்போதே ஜேசிபி இயந்திரத்தையும் பணியாளர்களையும் வரவழைத்து கால்வாய்களில் உள்ள மண் மற்றும் அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்பின்பு சந்தை ரோட்டில் எஸ்பிஜி கோவில் அருகில் செல்லும் பிரதான கழிவு நீர் கால்வாய் சிறிய பகுதிக்கு உள்ளே சென்று அடைப்புகளை பார்வையிட்டார். அப்போது அதில் சில ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களில் மணல் அள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்பு வஉசி சந்தை அந்தோனியார் கோவில் அருகில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை பார்வையிட்டு எந்தப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய உத்தரவிட்டார். பிறகு தீயணைப்பு நிலையம் வரை சென்று கால்வாய்களை பார்வையிட்டார். பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், மீண்டும் எந்தவிதமான தகவலும் சொல்லாமல் பணிகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அடைப்பு இல்லாமல் செல்கிறதா? என்பதை பார்வையிட வருவேன் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை 3 வார்டுகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று ஒவ்வொரு பணிகளாக பார்வையிட்டார். அதுபோல கழிவுநீர் செல்லும் பிரதான கால்வாய்களையும் பார்வையிட்டு உடனடியாக அடைப்புகளை சரி செய்ய ஆணையிட்டுள்ளார். இரு சக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று பணிகளை பார்வையிட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேயர் ஜெகன் பொியசாமி நடந்து வரும்போது பொதுமக்களிடம் கலந்துரையாடும் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சி மேயராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மாநகராட்சிக்கு தேவையான நிதிகளை பல்வேறு பணிகளுக்கு கனிமொழி எம்.பியின் ஆலோசனையின்படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சிபகுதி மக்களுக்கு எனது பணியை செய்ய வேண்டும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால் பணிகளை பார்வையிட்டு வருகிறேன். உங்கள் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சரியான முறையில் உள்ளதா? சாலை வசதி உள்ளதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். எனது பணி தொடர்ந்து மாநகர மக்களுக்காக நடைபெறும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மேயராக இருப்பவர்கள் கார்களில் பவனி வருவார்கள். ஆனால் மேயர் ஜெகன் பொியசாமி இருசக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று பணிகளை அதிகாலை முதல் 4 மணி நேரம் வரை பார்வையிட்டது பொதுமக்கள் மத்தியில், மாநகராட்சி மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விடுமுறை நாளாக இருந்தாலும், எந்த ஒரு நாளாக இருந்தாலும் அதிகாலை முதல் மாநகர மக்களுக்காக பணிகளை துவக்கி நள்ளிரவு வரை ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கரூரில் விஜய் நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 30 பேர் மரணம்… மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு

Next Post

கரூருக்கு நோில் சென்று உயிாிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் கனிமொழி எம்பி ஆறுதல் கூறினாா்.

Next Post
கரூருக்கு நோில் சென்று உயிாிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் கனிமொழி எம்பி ஆறுதல் கூறினாா்.

கரூருக்கு நோில் சென்று உயிாிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் கனிமொழி எம்பி ஆறுதல் கூறினாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In