தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச் சங்க 21வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆண்டுவிழா அர்ச்சனா, சுப்ரியா மாணவிகளின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். நலச்சங்க தலைவர் தங்கராஜா தலைமை உரையாற்றினார். கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முரளி சிறப்புரை வழங்கினார். ஆண்டு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கவுன்சிலா் சுப்புலட்சுமி பொன்ராஜ் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சண்முகராஜ் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்றத பொதுக்குழுக் கூட்டத்தில் ஆண்டறிக்கையை செயலாளர் தமிழ்ச்செல்வன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சண்முகசுந்தரம் வாசித்தார். புதிய நிர்வாகிகள் தேர்தல் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக தங்கராஜா செயலாளராக தமிழ்ச்செல்வன் பொருளாளராக சண்முகசுந்தரம் தேர்ந்தெடுக்கப்படனர். துணைத் தலைவராக சண்முகராஜ். பாலசுப்ரமணியன் துணைச் செயலாளராக நாகராஜ், ஹேமலதா, புரவலராக டேவிட்சன் புதிய செயற்குழு உறுப்பினர்களாக கென்னடி, ஜீவா பாண்டியன் , முத்துராஜ் வீரப்பெருமாள், காசிக்கனி, மாரியப்பன். சுப்புராஜ் என்ற கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வத்சலா தேவி நன்றி கூறினாா்.

