தூத்துக்குடி
2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டுடன்பட்டி கிராமத்தை சேர்ந்த கோகுல் சிங்க்கு ஒட்டுடன்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
கோகுல் சிங் 2020ம் நடைபெற்ற குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் தூத்துக்குடியில் உதவி வணிக வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துணை ஆட்சியராக பணியாற்ற இருக்கும் கோகுல் சிங்க்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்க தலைவர் அன்ன லட்சுமணமூர்த்தி, பொருளாளர் செல்லத்துரை, செயலாளர் ரெங்கசாமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி லட்சுமணகாந்தன் பாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், அய்யாத்துரை மற்றும் ஒட்டுடன்பட்டி கிராமத்தை சார்ந்த பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், அபிவிருத்தி நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

