தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் பிரதான கால்வாயாக உள்ள பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகள், தேவையற்ற கழிவு பொருட்களை அகற்றி சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில்வே வளாகத்தில் உள்ளே ஓடும் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டடுள்ள அடைப்புகளை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் செய்யும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அதே போல் 1ம் கேட் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னர் அமைச்சர் கூறுகையில் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் கடலுக்கு செல்லும், அனைத்து வழித்தடத்திலும் உள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகள் எல்லாம் அகற்றப்பட்டு சீரான முறையில் மழைநீர் வழிந்தோடும் வகையில் முழுமையாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கினாலும் அதையும் பல்வேறு வகையில் உடனடியாக அப்புறப்படுத்துவதற்கும் லாாிகள் மூலம் பணிகள் நடைபெறும் எல்லாவற்றிலும் மக்கள் பாதிப்பு அடையாத வகையில் அதை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாாிகள் உள்பட அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த காலத்தில் பெய்த கனமழையால் ரயில்வே வளாகத்திலும் மழைநீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற நிலை வராது. இதை சாிசெய்யும் பணியின் மூலம் 25,26,27 வார்டுக்குட்பட்டபகுதியில் மழைநீர் தேங்காது. மக்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை என்று தொிவித்தார்.
அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலா் உடனிருந்தனர்.

