தூத்துக்குடி
இந்திய ஜனநாயக கட்சி தென்மாநில செயலாளராகவும் மற்றும் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி தூத்துக்குடி மாநகர மக்களில் தேவையற்ற தொழிற்சாலையாக இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தன்னம்பிக்கையுடனும் போராட்ட குணத்துடனும் கொரோனா காலக்கட்டத்திலும் மழை வௌ்ள காலத்திலும் தன்னால் இயன்ற உதவிகள் செய்து ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை தேவைகளை உாிமையோடு பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து மாவட்ட கலெக்டா் மற்றும் எஸ்.பியிடம் நோில் குறைகளை தொிவித்தும் சிலருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களை நீதிமன்ற சட்டத்தின் மூலம் கிடைக்க செய்தும் மக்கள் நலப் பணிகளை சிறப்பாக செய்து அனைத்து தரப்பினரிடமும் நட்பாக கொண்டு எல்லா வகையிலும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலன் கருதி முழுமையாக பணியாற்றி வந்த அருணாதேவி ரமேஷ்பாண்டியன், தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மாவட்ட தேர்தல் அதிகாாியும் கலெக்டருமான லட்சுமிபதியிடம் மனுதாக்கல் செய்த பின் அளித்த பேட்டியில் கூறியதாவது கனிமொழி மேலும் பல பணிகளை செய்வதற்கு எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்கு சேகாிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. தற்போது அவர்தான் அதிகாரத்தில் இருக்கிறார். பல பணிகளை செய்திருந்தால் நீங்கள் வாக்கு கேட்க வரவேண்டிய அவசியமே இல்லையே செய்த பணிக்கு ஓட்டு உங்களுக்கு விழும். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர் சென்னையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். வந்த வழியிலேயே அவரை அனுப்பிவிட வேண்டியது தான். தமாக வேட்பாளர் விஜயசீலன் அவரை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நான் தொடர்ந்து செய்த பணிகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஸ்டெர்லைட் தேவையில்லை என்ற போராட்டத்தில் கனிமொழி பங்கு எதுவும் இருந்தது இல்லை. நான் களமிறங்கி பல பணிகளை செய்துள்ளேன். இந்த மாவட்ட மக்களும் லஞ்சம் ஊழல் இல்லாத நே lர்மையான நிா்வாகத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு தகுதியான வேட்பாளா் இந்த தொகுதியில் நான் மட்டும் தான் எல்லோரும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

