தூத்துக்குடி
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி இந்தியா கூட்டணி தூத்துக்குடி திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ராமநாதபுரம், தொகுதி வேட்பாளர்களை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நிலையில் காலையில் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் கனிமொழிக்கு வாக்கு சேகாிக்க வந்த முதல்வரை மார்க்கெட் செயலாளர் மனிராஜ், மேலாளர் நியூட்டன், உதவி மேலாளர் ரவி, ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் வியாபாாிகளிடம் கை குலுக்கி நலம் விசாாித்து உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். பின்னா் லயன்ஸ் டவுன் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டறிந்த அவர் மீனவ குடும்பத்தில் தேநீர் அருந்தினார்.
பின்னர் முக்கிய சாலைகள் வழியாக பொதுமக்களிடம் தனது கையை உதயசூாியன் வடிவில் காண்பித்தும் கும்பிட்டும் வாக்குகளை சேகாித்து சென்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயா் ஜெகன் பொியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநகர அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன் சிங் பரமசிவன், பால்ராஜ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சிவக்குமார், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபாியேல்ராஜ், பாலசுப்பிரமணியன், ஓன்றிய கவுன்சிலர் பாலன், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், சரவணக்குமார், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், பொன்னப்பன், கண்ணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளா வீரபாகு, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, முத்துராஜா, செந்தில்குமார், பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தராஜ், ஜெயசிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் செய்யது காசிம், மணி, கருணா, அல்பட், உள்பட பலர் பங்கேற்றனர்.

