தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு குடியுாிமை சட்டம் உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார். இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்ற வருவார்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது, நமது ஆட்சியில் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலுசேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. இந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும். ஏற்கனவே அமைச்சர் உதயநிதிஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். என்று கூறியுள்ளார். அதே போல் மகளிர் அணியும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து அணிகள் மட்டுமின்றி ஓன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேருர் செயலாளர்கள் என ஓட்டுமொத்தமாக இணைந்து பணியாற்ற வேண்டும். சென்னையில் கலைஞர் நினைவு மண்டபம், திறப்பு விழா நடைபெறுகிறது. அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் மிகப்பொிய வெற்றியை ஈட்டி தருவதற்கு பணியாற்றி முதல்வாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், ரமேஷ், கவிதாதேவி, அன்பழகன், சீனிவாசன், குபேர் இளம்பரிதி, விஸ்வநாத்ராஜா, ஜெயசிங், வக்கீல் அசோக், பொன்சீலன், ராமலட்சுமி, துணை அமைப்பாளர் குருராஜ், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வினிதா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னப்பாண்டியன், முருகேசன், சுப்பிரமணியன், செல்வராஜ் ராதாகிருஷ்ணன், மூம்முர்த்தி, அன்புராஜ், நவநீதிகண்ணன், ராமசுப்பு, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவிந்திரன், கயத்தாறு நாகராஜா, மற்றும் கருணா, மணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

