தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பாக நடைபெற்றுவரும் விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளியில் முகப்பு தோரணவாயில், பள்ளி உள் அரங்கம் திறப்புவிழா மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது.
பேராயர் இராபர்ட் கால்டுவெல் சபைமன்ற தலைவர் குருவானவர் செல்வின்துரை ஆரம்ப ஜெபம் செய்தார்.
முப்பெரும் விழா தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில்,திருமண்டல அனைத்து பள்ளிகளின் மேலாளர் பிரேம் குமார் ராஜாசிங் முன்னிலையில் நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் ஆட்லின் ஷெனி வரவேற்று பேசினார். அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் அரசகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருமண்டல குருத்துவ செயலர் குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்டாக் ஜெபம் செய்ய அரசகுமார் கல்வெட்டை திறந்து வைத்தார்.
திருமண்டல உபதலைவர் குருவானவர் தமிழ்ச்செல்வன் ஜெபம் செய்யமுகப்பு தோரணவாயிலை நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் திறந்துவைத்தார்.
பள்ளியின் ஆண்டுவிழாவில் கே.ஜி. முதல் பத்தாம் வகுப்புவரை கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்றமாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் அரசகுமார் மற்றும் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
பள்ளிதாளாளர் இன்ஸ்டீன் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.
திருமண்டல பொருளார் குருவானர் டேவிட்ராஜ், பேராயர் ராபர்ட் கால்டுவெல்,கல்லூரி தாளாளர் எபனேசர் மங்களராஜ், போப் கல்வியியல் கல்லூரி தாளாளர் சாலமோன் பொன்ராஜ், கால்டுவெல் கூடைப்பந்தாட்ட அகாடமிதலைவர் கிருபாகரன் ஜோசப் ஆகியோர் வாழ்த்துரைவழங்கினர்.
திருமண்டல உபதலைவரும்,பள்ளித் தலைவருமான குருவானவர் தமிழ்ச்செல்வன் நிறைவு ஜெபம் செய்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிதாளாளர் இன்ஸ்டீன், துணைமுதல்வர் ஆட்லின் ஷெனி, ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசௌந்தர்யா, இவாஞ்சலின் சான்ட்ரா, ஜெர்லின், மெர்சிபா, கனிச்செல்வி, பிரான்சியா உட்பட ஆசிரியைகள் செய்திருந்தனர்.

