தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காரணத்தால் பணப்பட்டுவாடா மற்றும் இலவசப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தீவிரமாக வாகனத் தணிக்கை செய்ய நேற்று உத்தரவிட்டார்கள்.
அதன்படி சங்கரலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரகுராமாபுரம் கிராமத்திற்கு அருகே உதவி ஆய்வாளர் திரு.ஹென்சன் பால்ராஜ் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த TN 76 H 6013 என்ற எண் கொண்ட TATA ACE வாகனத்தை நிறுத்தியபோது அதை ஒட்டி வந்த ஓட்டுனர் வானத்தை விட்டுவிட்டு இறங்கி ஓடினான். அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் சுமார் 40 கிலோ மதிக்கத்தக்க 22 மூடைகள் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த வாகனத்தை சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

