தூத்துக்குடி தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்;ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குட்டி தலைமை வகித்தார். ஐஎன்டியுசி தொழிற்சங்க செயலாளர் ஷிவ்ராஜ் மோகன், முன்னிலை வகித்;தார். ஆசிரியர் செல்வமரகதம் வரவேற்புரையாற்றினார்.
ஐஸ்வர்யம் கம்பி நிறுவனங்களின் சார்பில் 10 மாணவ மாணவிகளுக்கு மதிவண்டிகளை மேலாளர் உமயவேல் வழங்கினார். விழாவில் பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உலகின் ஓளி அறக்கட்டளையை சேர்ந்த ஜான்சன் செய்திருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் விக்டர் நன்றியுரையாற்றினார்.

