தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு மாப்பி;ள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகரத்திமணி வரவேற்புரையாற்றினார்.
சண்முகையா எம்.எல்.ஏ 73 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கி பேசுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்த திட்டம் நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் கல்வியும் மருத்துவதுறையும் எனக்கு இரு கண்களை போன்றது. என்று அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியாவில் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் பெற்றது மட்டுமின்றி எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தி வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்கிறது. நான்முதல்வன், புதுமைப்பெண், என 14 வகையான திட்டங்களை பள்ளிக்கல்வி துறைக்கு இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகளாகிய நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் ஆசிரியர்களையும் மதித்து பெற்றோர்களையும் மதிக்க வேண்டும். எதிர்காலத்தில் நீதிபதி ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற பதவிகளை அடைய வேண்டும். என்ற இலக்கோடு படிப்பை தொடர வேண்டும். தமிழக முதலமைச்சரின் அனைத்து திட்டங்களுக்கும் உங்களுடைய பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று தாய்தந்தையரிடம் எடுத்துக்கூறுங்கள் இந்த அரசும் இந்த தொகுதி எம்.பியும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். என்று பேசினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், முத்துமாலை, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், இளைஞர் அணி ராஜேந்திரன், பாரி, கிளைச்செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் மேரிகீதா நன்றியுரையாற்றினார்.

