தூத்துக்குடி
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்று திமுக தலைமை எடுத்த முடிவின்படி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர் உத்தரவிற்கிணங்க அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளுடன் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சில தினங்களுக்கு முன்பு 100 பெண்களுக்கு தையல் மிஷின் கனிமொழி எம்.பி வழங்கினார். இதே போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்த அசன்அலி என்பவர் தொழில் செய்வதற்காக 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி போல்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து அசன் அலிக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கி நல்ல முறையில் தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

