• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்

policeseithitv by policeseithitv
May 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மாநகர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில், வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு ஒரு சில இடங்களில் தினசரியும், சில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலத்திலும் முடிந்தளவு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போது வரை மழை இல்லாததால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் ஒரு நாள் தாமதமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 62 எம்எல்டி அளவு தண்ணீர் தேவையாகும். ஆனால் தற்போது 20 எம்எல்டி தண்ணீர் தான் கிடைக்கிறது. இது குறித்து வல்லநாடு நீரேற்று நிலையம், உரைகிணறு ஆகியவறில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் நீர் பெறுவதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் சரவணக்குமார் கலெக்டரிடம் கோரிக்கை

Next Post

இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

Next Post
இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In