தூத்துக்குடி.
தூத்துக்குடி பாளை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்றது.
கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்து பேசுகையில்: வேம்படி இசக்கியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் ஆகும். பக்தர்கள் அனைவருக்கும் அம்மனில் அருளாசி கிடைக்கப்பெற்றும் இன்னிசை கச்சேரி மூலம் மனதிற்கு இதமான ஆனந்தமும் கிடைக்கப்பெற்றும் வாழ்வில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேம்படி இசக்கியம்மனை வேண்டிக்கொள்கிறேன் என்று பேசினார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், ராமகிருஷ்ணன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், கோவில் நிர்வாக கமிட்டியை சேர்ந்த பொன்ராஜ், பாண்டியராஜன், பொன்இசக்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

