மத்தியபிரதேஷ் மாநிலத்தில் இந்திய அளவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்-களுக்கான குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி-யை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவி இந்திய அளவில் 3-இடம் பிடித்து சாதனை படைத்து ஊர் திரும்பினார் அவரை தூத்துக்குடி நடைபயிற்ச்சி மேற்கோள்வோர் சங்கத்தினர் சார்பில் வரவேற்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்கான அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சார்ந்த வீரர்கள் சுமார் 1000-க்கும் மேலானோர் கலந்து கொண்டனர் இதில் தமிழகம் சார்பாக தூத்துக்குடி-யை பூர்வீகமாக கொண்ட ராகவா நந்தம் என்பவரது மகள் ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற B.COM படிக்கும் கல்லூரி மாணவி கலந்து கொண்டார் இந்த போட்டியில் இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்து பரிசு சான்றிதழ்களை பெற்று சொந்த ஊர் திரும்பிய ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா-வில் வைத்து நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் சார்பாக மாலை சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது .
இந்திய அளவில் நடைபெற்ற குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 3-இடம் பிடித்துள்ள இத்தகைய திறமை உள்ள மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த வேலை வழங்க வேண்டும் என நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினை சார்ந்த US.சேகர், k.பழனிவேல், துரைசிங்கம், செல்லத்துரை, ஜெகன், மணிகுட்டி, பிரபாகர், சண்முகம், லெட்சுமணன், சந்தனம் செட்டியார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

