நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 30
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவுக்கிணங்க தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுதியான இளைஞர்களுக்கு தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு கிடைத்திட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற வேலை தேடுபவர்களுக்கான வட்டார அளவிலான இவ்வேலைவாய்ப்பு முகாமில் 23 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். இம்முகாமில் வேலை வாய்ப்பை பெற்றோர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேலை வாய்ப்பினை பெற இயலாதவர்கள் மனம் தளராமல் மீண்டும் முயற்ச்சித்து வேலை வாய்ப்பை பெற வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட சுமார் 486 நபர்களில் 174 நபர்கள் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து, மகளிர் திட்ட இயக்குநர் சு.முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.எகசானலி, உதவி திட்ட அலுவலர்கள் பா.பாலன், சீனிவாசன், முருகேசன், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

