வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் டிசம்பர் 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,வேதாரணியம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சார்பில் முன்னாள் அமைச்சரும் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. எஸ். மணியன் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேதாரணியம் நகரச் செயலாளர் எம் நமச்சிவாயம்,கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.T.ரவிச்சந்திரன், மாவட்ட M.G.R இளைஞரணி செயலாளர்
இ.திலீபன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் S.மாணிக்கவாசு மற்றும் அதிமுக மாவட்ட நகர கிராம வார்டு கழக நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.இறுதியாக நகர கழக துணைச் செயலாளர் S.சுரேஷ் பாபு நன்றி உரையாற்றினார்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

