வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரணியம் செப்டம்பர் 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வேதாரணியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் முதல் ஆதனூர் வரை உள்ள மானங்கொண்டான் ஆறு,முள்ளி ஆற்றில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் வெங்காய தாமரையால் மழைக் காலத்தில் தேங்கும் நீரை வடிய விடாமல் தடுத்தும்,விவசாயம் செய்யும் நெற்பயிர் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைய செய்யும் வெங்காய தாமரையை உடன் நூறுநாள் ஆட்களைக் கொண்டு அகற்றி விடவும்,
ஒரு வார காலமாக 100 நாள் வேலை செய்யும் பணியாட்கள் வேலைக்கு வந்து கம்ப்யூட்டர் சர்வர் வேலை செய்யாததால் பணி செய்யாமல் மன வேதனையோடு திரும்பி செல்லும் பணி ஆட்களுக்கு ஊதியம் வழங்கியும் உடன் 100 நாள் வேலையை துவங்கிட வலியுறுத்தி சிபிஐ மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் டி.நாராயணன்
வி.தொ.ச. மாவட்ட செயலாளர் கே. பாஸ்கர் மற்றும் பாலகுரு, முருகானந்தம்,
செங்குட்டுவன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் எம் செல்வராஜ் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்.இறுதியில் கே. மாரியப்பன் நன்றி உரையாற்றினார்.இறுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

