• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு 

policeseithitv by policeseithitv
August 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

நாகை ஆக 11

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. இதில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர்

பாலாஜி, கீழ்வேளுர் நாகைமாலி, பெருந்துறை ஜெயகுமார், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

பின்பு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி இன்று முதல் ஒருவார காலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம்

அடுத்த திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் “போதைப் பாதை அழிவுப்பாதை அதில் யாரும் செல்லாதீர்கள் யாரையும் செல்ல வீடாதீர்கள். போதையுடன் கைக்குலுக்காதீர்கள், உங்கள் வாழ்க்கையே கை நழுவி போய்விடும். போதைக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அழித்தல் அழிவுக்கு துணை போகாதீர்கள். போதை உங்கள் சிந்தனையை அழிக்கும் உற்சாகத்தை கெடுக்கும், வளர்ச்சியை தடுக்கும்.

நீங்கள் பாராட்டி, சீராட்டி வளர்த்த உடம்பை நீங்களே ஏன் கெடுத்துக்கொள்கிறீர்கள்” என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக்கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொகுப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளா்

Previous Post

எதிர்கால இந்தியாவை வழிநடத்துபவர்கள் மாணவ,மாணவிகள் தான் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது கால்டுவெல் பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

Next Post

தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது: ஏபிசி மகாலெட்சுமி கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் மாணவிகளுக்கு அறிவுரை!!

Next Post
தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது:  ஏபிசி மகாலெட்சுமி கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் மாணவிகளுக்கு அறிவுரை!!

தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது: ஏபிசி மகாலெட்சுமி கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் மாணவிகளுக்கு அறிவுரை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In