சென்னை மணலி புதுநகர் பகுதியில் நடந்த கல்வி திருவிழா நிகழ்ச்சியில் காமராஜர் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் தூத்துக்குடி மண்ணின் மைந்தர் வெற்றி முருகன் முதலிடம் பிடித்து அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணனிடமிருந்து ரொக்கப்பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் பெற்றார்.
மாணவர் வெற்றிமுருகனுக்கு அவர் பயின்றுவரும் மணலி புதுநகர் இன்பென்ட் ஜீசஸ் மேனிலைப்பள்ளி பள்ளி தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

