ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கோரி
பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.
தூத்துக்குடி,
ஜூலை, 5
தூத்துக்குடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம், ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தனிதனியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது; ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வருகிறது. ஆலை முடபபட்டதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர
எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என் அம்மனுவில் கூறியுள்ளனர்.

