• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தில் சேரன்மாதேவி, புளியங்குடி உட்பட 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

policeseithitv by policeseithitv
June 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழகத்தில் சேரன்மாதேவி, புளியங்குடி உட்பட 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் சேரன்மாதேவி, புளியங்குடி உட்பட 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.6.2022) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார்.

 

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

 

சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர். தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் – சேலையூர், ஆவடி மாநகரம் – எஸ்.ஆர்.எம்.சி., தாம்பரம் மாநகரம் – வண்டலூர், வேலூர் மாவட்டம் – காட்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை ஊரகம், கடலூர் மாவட்டம் – திட்டக்குடி, கரூர் மாவட்டம் – கரூர் ஊரகம், புதுக்கோட்டை மாவட்டம் – கோட்டைபட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை,

 

கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் – ஊமச்சிக்குளம், திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊரகம், தேனி மாவட்டம் – பெரியகுளம், இராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூர், திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் – புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜாராம் நியமனம் – டிஐஜி உத்தரவு!!

Next Post

நாகை வாய்மேடு லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது!! 

Next Post
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை மனு !!

நாகை வாய்மேடு லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In